2024 தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சர் ஒட்டி ஓட்ட முயற்சிக்கும் பிரஷாந்த் கிஷோர்!

Update: 2021-07-14 16:00 GMT

2024'ம் ஆண்டு தேர்தலுக்குள் பஞ்சராகி கிடக்கும் காங்கிரஸ் கட்சியை பஞ்சர் ஒட்டி தேர்தல் பந்தயத்திற்குள் ஓட வைக்க முயற்சிக்கிறார் பிரஷாந்த் கிஷோர்.

ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார் பிரசாந்த் கிஷோர், நாட்டில் முன்றாவது அணியை உருவாக்க முயல்கிறார். என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் நாட்டில் மிக சில கட்சிகளை தவிர பல கட்சிகள் ஒத்துவராத நிலையில் காங்கிரஸ் கட்சியின் கதவை தட்ட துவங்கியுள்ளார்.

ஏற்கனவே தலைவர் யார் என்பதே தெரியாத நிலையில் பஞ்சராகி கிடக்கும் காங்கிரஸ் கட்சியை 2024'ம் ஆண்டு தேர்தலுக்குள் பஞ்சர் ஒட்டி களத்தில் பந்தயத்திற்குக் இறக்கும் விதமாக திடீரென நேற்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி., ராகுல்காந்தி, பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

Similar News