மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கும் திமுக அரசு அந்தத் திட்டங்களை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை 2025 ஆம் ஆண்டிலும் தமிழக கிராம மாணவ மாணவியர் கல்வி கற்பதற்காக,பரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்பது வெறும் விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை பின்தங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராம ஊராட்சியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். இரண்டு பக்கமும் பவானி ஆற்றால் சூழப்பட்ட இந்த கிராமத்தில் பள்ளி மாணவ,மாணவியர் அருகில் உள்ள நகரங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் பரிசலில் பவானி ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது வெள்ளப் பெருக்கு காலங்களில் பரிசல் போக்குவரத்து தடைபடுவதால் சுமார் 8 கி.மீ தொலைவுக்குச் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது
குறிப்பாக,அவசர மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள் இதனால் குறித்த நேரத்தில் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாமல் உயிரிழப்புகள் பல ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பவானி ஆற்றைக் கடந்து செல்ல, உயர்மட்டப் பாலம் அமைத்துத் தரக் கோரி பல ஆண்டுகளாக அம்மாபாளைய கிராமப் பொதுமக்கள்,முதலமைச்சரிடமும்,அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினரிடமும் நேரடியாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை