பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீருக்கு 3வது முறையாக கொலை மிரட்டல்!

முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும் டெல்லி பா.ஜ.க. எம்.பி.யுமான கவுதம் கம்பீருக்கு மூன்றாவது முறையாக கொலை மிரட்டல் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் காஷ்மீர் பிரச்சினை மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்துக்களை கூறிவருவது வழக்கம்.

Update: 2021-11-29 04:20 GMT

முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும் டெல்லி பா.ஜ.க. எம்.பி.யுமான கவுதம் கம்பீருக்கு மூன்றாவது முறையாக கொலை மிரட்டல் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் காஷ்மீர் பிரச்சினை மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்துக்களை கூறிவருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி 'ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்' என்ற அமைப்பு இமெயில் மூலமாக கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. மேலும் அதற்கு அடுத்த நாள் வந்த இமெயில் முகவரியில் மீண்டும் ஒரு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதாவது காஷ்மீர் பிரச்சனை மற்றும் அரசியலில் இருந்து விலகவில்லை எனில் கொலை செய்துவிடுவோம் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கைக்கு பின்னர் கவுதம் கம்பீர் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், மீண்டும் அதே அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அந்த மிரட்டலில் போலீசாரும், ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்வேதாவும் எங்களை எதுவும் செய்ய முடியாது. டெல்லி போலீசில் எங்களுக்கு உளவாளிகள் உள்ளனர். உங்களை பற்றிய அனைத்து விரவங்களையும் வாங்கியுள்ளோம் என்ற மிரட்டல் வந்துள்ளது. இதனால் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source: Maalaimalar

Image Courtesy:Ndtv


Tags:    

Similar News