40 ஆயிரம் ஆளே இல்லாத வாக்குகள் - ஈரோடு இடைத்தேர்தலில் அம்பலமான திமுகவின் தில்லாலங்கடி வேலைகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்த வாக்காளர்கள் 5,000 பேரின் பெயர் நீக்கப்படவில்லை. 4ல் ஒரு பங்கு அதாவது சுமார் 45 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை என்ற பகீர் தகவல் கிடைத்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை திமுகவினர் கடைப்பிடிப்பதில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் தென்னரசு போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் திமுக தரப்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தரப்பிற்கும், திமுக தரப்பிற்கும் ஒத்துவராத காரணத்தினால் இருவரும் இணைந்து களப்பணியே செய்யவில்லை. இந்த நிலையில் மக்கள் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாத காரணத்தினால் வேறு திமுக கூட்டணியின் மேல் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தேர்தலை சந்தித்தால் கண்டிப்பாக பின்னடைவுதான் என உணர்ந்த திமுக தரப்பு போலி வாக்காளர்களை நம்பி இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.