மெரினா சென்ற சசிகலா ஆதரவாளர்களிடம் 6 செல்போன், ரூ.45,000 திருட்டு !

சென்னை, மெரினா கடற்கரைக்கு நேற்று (அக்டோபர் 16) சசிகலா சென்றபோது, அவரது ஆதரவாளர்களிடம் 6 செல்போன் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை சிலர் திருடிச் சென்றுள்ளனர்.

Update: 2021-10-17 05:19 GMT

சென்னை, மெரினா கடற்கரைக்கு நேற்று (அக்டோபர் 16) சசிகலா சென்றபோது, அவரது ஆதரவாளர்களிடம் 6 செல்போன் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை சிலர் திருடிச் சென்றுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற பின்னர் முதன்முறையாக நேற்று முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர்., நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் 1000க்கும் மேற்பட்டோர்கள் சென்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சாந்தகுமார், பேச்சிமுத்து, முனுசாமி உள்ளிட்ட 6 பேரிடம் இருந்து செல்போன் மற்றும் ரமேஷ், பரத்குமார், பாபு ஆகியோரின் பர்ஸிலிருந்து 45 ஆயிரம் ரூபாய் அளவிற்கு பிக்கெட் அடித்துள்ளனர். இது பற்றி அவர்கள் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News