60 ஆயிரம் வீரர்கள், 20 ஆயிரம் ஊழியர்கள், 5 ஆயிரம் குழுக்கள் - பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு கோலாகல 'மோடி கபடி லீக்'
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 60,000 வீரர்களுடன், 5000 குழுக்களுடன் பிரம்மாண்ட கபடி லீக் போட்டியை தமிழக பா.ஜ.க இன்று நடத்துகிறது.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 60,000 வீரர்களுடன், 5000 குழுக்களுடன் பிரம்மாண்ட கபடி லீக் போட்டியை தமிழக பா.ஜ.க இன்று நடத்துகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 72 ஆவது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக அரசியல் தலைவர்களாலும், மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு தமிழக பா.ஜ.க சார்பில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி 'மோடி கபடி லீக்' என்ற ஒரு விளையாட்டு போட்டியை நடத்த திட்டமிட்டு இன்று துவங்கியுள்ளார்.
இந்த கபடி விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கியது. இதில் 60 இடங்களில் 5000 குழுக்கள் அமைத்து 3000 அதிகாரிகளுடன், 20000 ஊழியர்களுடன், 60,000 வீரர்கள் என பிரம்மாண்டமாக தமிழக பா.ஜ.க இந்த கபடியை ஏற்பாடு செய்துள்ளது. இதனை இன்று தென்சென்னை மாவட்டத்தில் துவக்கி வைத்து தமிழகத்தின் பல இடங்களில் நடந்த திட்டமிட்டுள்ளனர் தமிழக பா.ஜ.க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு பிரிவினர் இந்த தகவலை அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.