'75 நாள் தி.மு.க ஆட்சியை பார்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது' : கர்ஜிக்கும் அண்ணாமலை!

Update: 2021-07-28 10:15 GMT

"மக்களுக்கு 75 நாள் தி.மு.க ஆட்சியை பார்த்து வெறுப்பு வந்துவிட்டது" என்ற உண்மையை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போட்டு உடைத்துள்ளார்.

திருவனந்தபுரம் செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது, "அ.தி.மு.க மாநிலம் முழுவதும் நடத்தும் போராட்டம் நியாயமானது. நியாயமான போராட்டம் என்பதால் மக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு உள்ளனர். தி.மு.க தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. பலமுறை சுட்டிக்காட்டி உள்ளது. 75 நாட்களாகியும் எந்தொரு முக்கியமான வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல் விலை, நீட் உள்ளிட்டவற்றை நீக்குவதாக சொல்லிவிட்டு இப்போது தப்பிக்க காரணத்தை கண்டுபிடித்து கொண்டிருக்கின்றனர்.

அ.தி.மு.க போராட்டம் வெற்றி பெறட்டும். மக்கள் உண்மையை உணர வேண்டும் என்பதால் அ.தி.மு.க போராட்டம் நடத்துவதால் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பா.ஜ.க. மக்களுடன் நிற்கும். தி.மு.க மீனவர்களுக்கு எதிரான செயல்படிவதை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் பா.ஜ.க. மீனவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. டெல்டா பகுதிகளில் விவசாய மக்களுக்கு கஷ்டம் தரும் பிரச்சனை, சாமானிய மக்களுக்கு 75 நாள் திமுக ஆட்சியை பார்த்து வெறுப்பு வந்துவிட்டது" என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Similar News