முதலமைச்சருக்கு கருப்பு கொடி: நடிகர் கருணாஸ் கைது.!

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நாளை முதலமைச்சர் சிவகங்கை மாவட்டத்திற்கு பரப்புரைக்கு செல்ல உள்ளார்.

Update: 2021-03-25 11:21 GMT

முதலமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு திட்டமிட்டிருந்ததாக நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸை இன்று போலீசார் கைது செய்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக மற்றும் பாமக, தமாகா, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.


 



இதனிடையே மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நாளை முதலமைச்சர் சிவகங்கை மாவட்டத்திற்கு பரப்புரைக்கு செல்ல உள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும்போது, கருப்புக்கொடி காட்டுவதற்கு நடிகர் கருணாஸ் திட்டமிட்டுள்ளதாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News