ஸ்டாலினிடம் ரூ.5 லட்சம் கோடி சொத்து - ராதாரவி பரபரப்பு தகவல்!

Update: 2022-07-05 10:48 GMT

சகோதரர் ஸ்டாலின் பேசுவதை விட்டுவிடுங்கள், ஏன் என்றால் அவர் ஊழல் செய்ய மாட்டார். ஏன்னா அவர் ரூ.5 லட்சம் கோடிக்கு சொந்தக்காரர். எனவே அவர் போய் ஊழல் செய்வாரா? என்று பா.ஜ.க. மாநில தலைவரிடம் அண்ணாமலையிடம் நடிகர் ராதாரவி பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, வள்ளூவர் கோட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதே போன்று நடிகர் ராதாரவி பேசியதாவது: தமிழகத்தின் பா.ஜ.க.வின் சிங்கமாக அண்ணாமலை இருக்கிறார். அவர் வருங்கால முதலமைச்சர்தான்.. ஆனால், இதை பா.ஜ.க.வில் இருக்கும் நாம் சொல்லவே கூடாது. அவர்தான் முதலமைச்சர் என்பது நமக்கு தெரியும். எனவே மனசுலேயே வச்சுக்கணும் என்றார்.

மேலும் பேசிய அவர், எனக்கு அண்ணாமலையிடம் பிடித்த விஷயம் ஒன்று உள்ளது. என்னை போன்று அவரும் அனைவரையும் பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்.. யாராக இருந்தாலும் பெயர் சொல்லி அவர்களை குறிப்பிட்டு பேசுவதுதான் வழக்கம். இதனை கருணாநிதியிடம் இருந்து கற்றுக் கொண்ட பழக்கம். இவ்வளவு பெரிய பா.ஜ.க. இயக்கத்தில் அனைவரின் பெயரையும் சொல்லி அழைப்பது நல்ல பண்பாகும். மேலும், தன்னுடைய பேச்சாலேயே பத்திரிகையாளர்களை திருப்பியவர் அண்ணாமலை.

பா.ஜ.க.வை பொறுத்தமட்டில் குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் அலைபவர்கள் யாரும் இல்லை. எதுவுமே இல்லாமல் சேரும் கூட்டம். எனவே நான் 30 ஆண்டுகளாக தி.மு.க.வில் குப்பை கொட்டியுள்ளேன். அ.தி.மு.க.வில் 18 ஆண்டுகளாக சிங்கமான தலைவியுடன் இருந்தவன். இருந்தாலும் ஸ்டாலின் எனக்கு பிடிக்கும். அவர் நல்ல மனுஷன்தான். கூட இருக்கிறது சரியில்லை. ஒன்னே ஒன்று சொல்லிக்கொள்கிறேன், ஸ்டாலின் பேசுவதை விட்டுவிடுங்கள், ஏன்னா அவர் ஊழல் செய்ய மாட்டார். அவரிடம் ரூ.5 லட்சம் கோடிக்கு சொந்தக்காரராக உள்ளார். அவர் போய்ட்டு ஊழல் செய்வாரா? இவ்வாறு ராதாரவி கூறினார்.

Source: One India Tamil

Image Courtesy: Twitter

Tags:    

Similar News