தமிழகத்தை வேலியாய் இருந்து முதலமைச்சர் பாதுகாக்கிறார்.. ராதாபுரத்தில் நடிகை விந்தியா பேச்சு.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா பரப்புரை செய்து வருகின்றார்.

Update: 2021-03-19 06:37 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா பரப்புரை செய்து வருகின்றார். அந்த வகையில் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ராதாபுரம் கல்யாணி அம்மன் கோயில் முன்பு ஏராளமான பெண்கள் கூடியிருந்தனர்.




 


அவர்கள் முன்பாக நடிகை விந்தியா பேசும்போது: சில உதிரி கட்சிகள் நமக்கு எதிரிகளாக மாறி தேர்தலில் நிற்கிறார்கள். வெறும் 6 தொகுதிக்காக தன்மானத்தை அடகு வைத்த அண்ணன் வைகோ மற்றும் ஒன்றுக்குமே லாயக்கில்லாத கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆறு கட்சிகளாக தற்பொழுது வந்திருக்கிறார்கள்.

அதிமுகவுக்கும், திமுகவிற்கு மட்டும்தான் சண்டை. உதய சூரியனுக்கும் இரட்டை இலைக்கும்தான். ஆறு பேர் ஒன்று சேர்ந்தாலும், 100 பேர் ஒன்றாக வந்தாலும் அதிமுகவை வெல்ல முடியாது.


 



ஆண்டவனை எதிர்க்க எந்த சக்தியும் இல்லை அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியும் இல்லை நெல்லையப்பர் வேலியாய் இருந்து நெல்லை மாவட்ட மக்களை பாதுகாப்பது போன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் வேலியாய் இருந்து பாதுகாத்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News