அ.தி.மு.க, தி.மு.க, எம்.பி.க்களுக்கு கிடைத்த புதிய பதவி!

பல்கலைக்கழகத்தின் நியமன உறுப்பினராக போகும் தமிழகத்தின் இரு மக்களவை உறுப்பினர்கள்!!!

Update: 2021-07-29 05:50 GMT

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நிர்வாக உறுப்பினர்களாக அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் குமார் மற்றும் திமுக எம்.பி., தயாநிதி மாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள சென்னை அடுத்துள்ள செம்மஞ்சேரியில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடல்சார் போக்குவரத்துத் துறை பற்றிய கல்வித்திட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகமாகும். 


இந்த பல்கலைக்கழகம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது . பல்கலைக்கழகத்திற்கு கொச்சி, கொல்கத்தா, மும்பை, நவி மும்பை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் வளாகங்கள் உள்ளன.


இந்நிலையில், தேசிய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நிர்வாக உறுப்பினர்களாக அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் குமார் மற்றும் திமுக எம்.பி., தயாநிதி மாறன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News