4ம் தேதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்.. ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., அறிக்கை.!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், அதிமுக, திமுக கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி இறுதி உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

Update: 2021-03-02 06:17 GMT

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், அதிமுக, திமுக கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி இறுதி உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல்: புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்தில் விருப்ப மனு செலுத்திய அனைத்து கழக உடன்பிறப்புகளுக்குமான நேர்காணல், தலைமைக் கழகத்தில் வருகின்ற 4.3.2021 வியாழக்கிழமை கீழ்க்கண்டவாறு மாவட்ட வாரியாக நடைபெற உள்ளன.


 



காலை 9 மணி முதல்: கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, திருநெல்வேலி மாவட்டங்கள்.

தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் கிழக்கு, விருதுநகர மேற்கு மாவட்டங்கள்

திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டங்கள்

திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்டங்கள்

புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், நீலகிரி மாவட்டங்கள்


 



மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, புதுச்சேரி, கேரளா ஆகியவை ஆகும்.

இந்த நேர்காணலில் தொகுதி பற்றிய நிலவரம், வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரம், தங்களுக்காக விண்ணப்பித்துள்ளவர்கள் மட்டும் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல் தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News