அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உறவினர், நிர்வாகி வீட்டில் ரெய்டு !

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நபர்களின் நிறுவனம் மற்றும் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-22 05:47 GMT

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நபர்களின் நிறுவனம் மற்றும் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த வாரம் அவரது வீடு மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக மீண்டும் இன்று 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவராகவும், அதிமுகவின் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராகவும் உள்ள இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News