அ.திமு.க. அலுவலகத்தை கைப்பற்றுவது முடியாத காரியம்.. சசிகலாவிற்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து.!

அ.திமு.க. அலுவலகத்தை கைப்பற்றுவது முடியாத காரியம்.. சசிகலாவிற்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து.!

Update: 2021-02-11 12:49 GMT

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே சசிகலா ஓரங்கட்டப்பட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், உய்யாலிகுப்பம் பகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் பேசும்போது, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சிதான் அமமுக.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதே சசிகலா ஓரங்கட்டப்பட்டார். கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று மன்னிப்பு கேட்ட பின்னர்தான் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 

மேலும் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவது என்பது நடக்காத காரியம். அமமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று கூறியது பிரேமலாதாவின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
 

Similar News