சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அ.தி.மு.க. தொண்டர்கூட செவிசாய்க்க மாட்டாங்க: கே.பி.முனுசாமி பேட்டி.!

அதிமுகவிற்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவர் கட்சியில் இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

Update: 2021-05-31 06:36 GMT

அதிமுகவிற்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவர் கட்சியில் இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தவே சசிகலா முயற்சி செய்து வருகிறார். சசிகலாவிற்காக ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார் என கூறினார்.


 



மேலும், ஒன்றயை கோடி அதிமுக தொண்டர்கள் இந்த இயக்கத்தை கட்டு காத்து வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அதிமுகவில் உள்ள எந்த தொண்டனும் சசிகலாவிடம் பேசவில்லை. மாறாக சசிகலாதான் போன் செய்து பேசி வருகிறார். சசிகலாவிடம் உள்ளவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சசிகலாவை தூண்டிவிட்டு வருகின்றனர்.




 


ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றால் சசிகலா குடும்பம் அதிமுகவை விட்டு விலகி இருப்பதுதான் நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News