எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி !

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-10-21 04:47 GMT

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தீவிர பிரச்சாரம் முடிந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் சிறிது காலம் ஓய்வில் இருந்து மீண்டும் வழக்கமான பணிகளை தொடர்ந்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் மதியமே மீண்டும் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

Source: News 18 TamilNadu

Image Courtesy:One India


Tags:    

Similar News