சாலையில் மர்மமாக இறந்துகிடந்த அ.தி.மு.க பிரமுகர் - பெரம்பலூர் அதிர்ச்சி சம்பவம்!

Update: 2022-04-27 14:30 GMT

அ.தி.மு.க. பிரமுகர் தலையில் வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது விபத்தா அல்லது கொலையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள நாரணமங்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவர் அ.தி.மு.க.வின் ஊராட்சி செயலாளராகவும், முன்னாள் துணைத்தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார். இதனிடையே இவர் இரண்டு சக்கர வாகனத்தில் ஆலத்தூர் கேட்டியிலிருந்து காரை செல்லும் வழியில் சென்றுள்ளார். அப்போது அவரது தலையில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இதனை அப்பகுதியில் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாடலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் மீது வாகனம் மோதியதா அல்லது கொலை செய்துவிட்டு சாலையில் வீசி சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்த பின்னர் ஆங்காங்கே கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. ஒரு அரசியல் கட்சி பிரமுகர் சாலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரம்பலூர் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News