ஜூன் 14ல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஜூன் 14ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-09 08:03 GMT

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஜூன் 14ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களை பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. அதன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனிடையே கட்சியின் கொறடா மற்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.




 


இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூன் 14ம் தேதி ராயப்பேட்டை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான அனுமதி கடிதம் டிஜிபி அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மற்றும் கொறடா தேர்வு செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News