அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு.!

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. அதே போன்று அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் இன்றுடன் முடிவடைய உள்ளது.

Update: 2021-03-03 03:55 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. அதே போன்று அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் இன்றுடன் முடிவடைய உள்ளது.

கடந்த 24ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வரும் நிலையில், அதனை வாங்குவதிலும், தாக்கல் செய்வதிலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர்.


 



கடந்த 7 நாட்களில் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விருப்ப மனு விநியோகம் இன்றுடன் நிறைவடைகிறது. தேர்தலுக்கு நேரம் குறைவாக இருப்பதால் ஒரே நாளில் நேர்காணல் நடத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதனால் நாளை ஒரே கட்டமாக நேர்காணல் நடத்தப்பட்டு, ஒரு சில நாளில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News