தி.மு.க.வை கண்டித்து 9ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு!
மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வருகின்ற 9ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வருகின்ற 9ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் அறிக்கை.
— AIADMK (@AIADMKOfficial) December 6, 2021
மாநில பிரச்சனையில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ! 1/2 pic.twitter.com/uYIeGWCoYL
அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய பதவிகளுக்கு நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே திமுக அரசுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்கவும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும், பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்கவும், அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தியும், அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வருகின்ற 9ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலோ, மக்களின் அன்றாடத் தேவைகளையும், அவர்கள் சந்திக்கும் ஏராளமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலோ மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறிதும் அக்கறை கொள்ளாமல் வாய்ச் சவடால் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த அலட்சியப் போக்கினை எதிர்த்துப் போராட கழகத்தின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவோம் என்று எச்சரிக்கிறது.