விவசாய கடன் தள்ளுபடி: தருமபுரியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.!
விவசாய கடன் தள்ளுபடி: தருமபுரியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாய பயிர் கடனை தள்ளுபடி செய்து பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். இந்த உத்தரவுக்கு தமிழகம் முழுவதிலும் உள்ள அதிமுகவினர் மட்டுமின்றி, மாற்று கட்சியை சேர்ந்தவர்களும், விவசாயிகளும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் முழுவதிலும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.
அதே போன்று நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இண்டூர் பகுதியில் அதிமுகவின் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதில் பாமகவை சேர்ந்தவர்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர். அதே போன்று பாப்பாரப்பட்டி மூன்று ரோடு சந்திப்பிலும் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.