அ.தி.மு.க. பற்றி அவதூறு.. எல்.கே.சுதீஷீக்கு வைகைச் செல்வன் கண்டனம்.!

கூட்டணி வைப்பதற்காக அதிமுக கெஞ்சுவதாகப் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் திருவண்ணாமலையில் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகைச் செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-04 05:35 GMT

கூட்டணி வைப்பதற்காக அதிமுக கெஞ்சுவதாகப் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் திருவண்ணாமலையில் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகைச் செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.




 


நேற்று (3ம் தேதி) திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஆர்.குன்னத்தூர் கிராமத்தில் தேமுதிக சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சுதீஷ் பேசும்போது: கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் நாம் கூட்டணி வைக்கவில்லை என்றால் அதிமுக என்ற கட்சியை இருந்திருக்காது.


 



இன்று நாம் கூட்டணிக்காக கெஞ்சவில்லை. அவர்கள் தான் நம்மிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் போன் அழைப்புகளை காண்பிக்கட்டுமா என பேசினார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த பேச்சுக்கு அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகைச்செலவம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக, அதிமுக கூட்டணி நீடிக்குமா அல்லது தொடருமா என்பது கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

Similar News