"அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா" என பொறிக்கப்பட்ட கல்வெட்டை சசிகலா திறப்பு !

Update: 2021-10-17 12:17 GMT

"அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா" என  பொறிக்கப்பட்ட கல்வெட்டை,  திருமதி வி.கே. சசிகலா திறந்துவைத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொன்விழாவையொட்டி திருமதி வி.கே. சசிகலா  அ.தி.மு.க கொடியை ஏற்றினார். கொடியேற்றம் நிகழ்வையொட்டி கல்வெட்டு திறக்கப்பட்டது.  அந்த கல்வெட்டில்    "அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா" என  பொறிக்கப்பட்டுள்ளது.   

இச் சம்பவம் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Maalaimalar


Tags:    

Similar News