சோனியா குடும்பத்திற்கு ரூ.15,000 கோடி கொடுத்த நாராயணசாமி.. மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு.!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் மற்றும் தேசியக்கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

Update: 2021-02-28 12:13 GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் மற்றும் தேசியக்கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.




 


அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புதுச்சேரி மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதாவது: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சோனியாகாந்தி குடும்பத்திற்கு ரூ.15,000 கோடி மத்திய நிதியில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார் என குற்றம் சாட்டினார்.


 



புதுச்சேரியில் பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் அரசாங்கம், மத்திய திட்டங்கள் குறித்து தேவையற்ற அரசியலில் ஈடுபட்டு வருகிறது என குற்றம்சாட்டினார்.


 



மேலும், டெல்லியில் உள்ள சோனியாவுக்கு கொள்ளையடித்த பணத்தை வழங்குவதற்கு அதிகமான கவனம் செலுத்தியிருந்தார் நாராயணசாமி.

காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் காரணமாக பல தலைவர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர் என்று கூறினார்.

Similar News