குற்றவாளிகளுக்கு பயந்த நிலை இப்பொழுது உ.பி'யில் இல்லை - கர்ஜித்த அமித்ஷா !

Update: 2021-12-02 14:15 GMT

குற்றவாளிகளுக்கு பயந்த நிலை உத்திரபிரதேசத்தில் இல்லை என அமித்ஷா பெருமிதமாக தெரிவித்துள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலம் புன்வர்கா கிராம பகுதியில் மா ஷக்கும்பரி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

அப்பொழுது கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது, "இதற்கு முன்னர் உத்தரப்பிரதேசத்தில் மாபியா மற்றும் குற்றவாளிகளின் ஆட்சியே நடைபெற்றது. ஆனால் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது" என்றார்


பின்னர் தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது, "குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதால் பெண்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதாகவும்" அமித்ஷா குறிப்பிட்டார். மேலும் "குற்றவாளிகளுக்கு பயந்து வெளி மாநிலங்களுக்கு பெண் குழந்தைகளை படிக்க அனுப்ப வேண்டிய நிலைமை தற்போது உத்தரப்பிரதேசத்தில் இல்லை" என அமித் ஷா தெரிவித்தார்.



Source - Maalai Malar

Tags:    

Similar News