மின்சார கொள்முதலில் ஊழல் செய்ய தயாரகும் தி.மு.க - ஆதரங்களை வெளியிட தயார் அண்ணாமலை எச்சரிக்கை

Update: 2021-10-19 13:00 GMT

மின்சார கொள்முதலில் தமிழகத்தின் 'ஆளும் கட்சி' பிரமுகர் பலனடையும் விதமாக முறைகேடு அரங்கேற உள்ளதாகவும், அப்படி நடந்தால் ஆதாரங்களை வெளியிட பா.ஜ.க ரெடியாக உள்ளதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, "தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எனர்ஜி கம்பெனி, 4000 முதல் 5000 கோடி ஆர்டரை தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் மேற்கொள்ள உள்ளது. தற்போது அந்த கம்பெனி நொடிந்து போய் உள்ளது. ஆனால் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் அதை வாங்கி, தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து 4000 கோடி முதல் 5000 கோடி வரையில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதை போன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு லாபத்தை ஏற்படுத்த இந்த முயற்சி நடக்கிறது. கம்பெனி பெயரை இப்போது குறிப்பிட விரும்பவில்லை. அவர்கள் போகிற பாதை அதை நோக்கி போகிறது.

நஷ்டமடைந்த நிறுவனத்தை வாங்கி, மின்சார வாரியத்திடமிருந்து ஒப்பந்தம் போட்டு லாபம் சம்பாதிக்க உள்ளனர். இதனால், மின்சார சப்ளை கூடி விடும் என்று காட்டுவார்கள். தி.மு.க அரசுக்கு இது கை வந்த கலை. எனவே எச்சரிக்கையாக சொல்கிறேன். 2006-11 ஆட்சி கால பாதைக்கு தி.மு.க போகாது என நம்புகிறேன். அப்படி போனால் எங்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம். தமிழக மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு இதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்" இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Source - Oneindia Tamil

Tags:    

Similar News