"தி.மு.க.,வை ஆட்சிக்கு கொண்டு வந்தீர்கள்; தேர்தல் வாக்குறுதியை அவர்கள் முழுமையாக நிறைவேற்றினரா? "- உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை !

Update: 2021-10-04 10:33 GMT

உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசியல் காட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மொளச்சூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பாபுவை ஆதரித்து, சுங்கு வார்சத்திரத்தில் நேற்று  பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை  பேசியதாவது:பிரதமர் மோடி ஆட்சியில், உள்ளாட்சிகளுக்கு வேண்டிய நிதி, மத்திய அரசிடம் இருந்து நேரடியாக வர ஆரம்பித்து விட்டது.

வசதி இல்லாதவர்களுக்கு வீடு, 100 நாள் திட்ட வேலைக்கு சம்பளம், ரேஷன் அரிசி உள்ளிட்ட எந்த திட்டமாக இருந்தாலும், மத்திய அரசு வாயிலாக, உள்ளாட்சி அமைப்புக்கு வந்து கொண்டிருக்கிறது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஓட்டளித்து, தி.மு.க.,வை ஆட்சிக்கு கொண்டு வந்தீர்கள்; தேர்தல் வாக்குறுதியை அவர்கள் முழுமையாக நிறைவேற்றினரா?

தேர்தல் பிரசாரத்தின் போது நகையை அடகு வைத்து கடன் வாங்க சொன்ன தி.மு.க.,வினர், நகையை அடகு வைத்தோர் மீது, இப்போது வழக்கு போடுகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து, மறுபடியும் தவறு செய்யாதீர்கள்.

இவ்வாறு அண்ணாமலை அவர்கள் மக்களிடம்  பிரச்சாரம் செய்தார்.

Dinamalar

Tags:    

Similar News