மறைமுக அசைன்மென்ட்டை கையில் எடுக்கும் அண்ணாமலை - கர்நாடக தேர்தல் மேலிட பார்வையாளரான பின்னணி
கர்நாடகாவில் பாஜக தான் ஆட்சியில இருக்கு அங்கே முதல்வராக பசவராஜ் பொம்மை இருக்கார், பசவராஜ் பொம்மையோட பதவிக்காலம் வரும்
கர்நாடகாவில் பாஜக தான் ஆட்சியில இருக்கு அங்கே முதல்வராக பசவராஜ் பொம்மை இருக்கார், பசவராஜ் பொம்மையோட பதவிக்காலம் வரும் மே மாதம் முடியுதுங்க. இதனால கர்நாடகத்துல அடுத்த கட்டமா சட்டப்பேரவை தேர்தல் பணிகள் எல்லாம் விறுவிறு ன்னு ஆரமிச்சு நடந்துட்டு இருக்கு.
இந்த தேர்தலில் கர்நாடகால எப்படியாவது மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த முறை பெற்ற வெற்றியை விட அதிக இடங்களை பிடிக்க வேண்டும் அப்டின்னு ஒரு பக்கம் பாஜக முயற்சித்தாலும் மறுபக்கம் ஆட்சியை பிடிக்க வேண்டும் அப்டின்னு காங்கிரஸ் ரொம்பவே தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை பாஜக தலைமை இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் பொதுச்செயலாளர் அருண் சிங் ஒரு அறிக்கை கொடுத்துருக்காரு, அதுல மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக பொறுப்பாளராகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்' அப்டின்னு குறிப்பிட்டு சொல்லிருக்காங்க!
இதுக்கு பின்னணில பெரிய திட்டம் இருக்குங்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வுக்கு அண்ணாமலை மேல செம்ம நம்பிக்கை, அதனாலதான் தமிழ்நாட்டுல அதுவும் நாடாளுமன்ற தேர்தல் சந்திக்கிற நேரத்துல பாஜக தலைவரா அண்ணாமலையை நியமிச்சாரு. 2019 ம் ஆண்டு பெங்களூர் தெற்கு காவல் துணை ஆணையராக அண்ணாமலை பணியாற்றிய நிலையில், அங்குள்ள அரசியல் சூழல் அவருக்கு நன்கு புரியும் மற்றும் அவருடைய பணி அனுபவம் கைகொடுக்கும் என்பதால் என்பதால் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதா சொல்றாங்க! ஆனா அதுக்கு பின்னாடி ஒரு மாஸ்டர் பிளான் வேற இருக்குங்க!