சசிகலாவை வரவேற்க கவனம் தேவை.. அ.ம.மு.க. தொண்டர்களுக்கு தினகரன் வேண்டுகோள்.!

சசிகலாவை வரவேற்க கவனம் தேவை.. அ.ம.மு.க. தொண்டர்களுக்கு தினகரன் வேண்டுகோள்.!

Update: 2021-02-06 20:00 GMT

சசிகலா வருகையின்போது வரவேற்பு அளிக்க தமிழக காவல்துறை நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக எல்லையான ஓசூர் முதல் சென்னை வரை தொண்டர்கள் மிகுந்த கவனமுடன் சசிகலாவிற்கு வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும், காவல்துறைக்கு தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எந்தவித இடையூர்களும் ஏற்படாது வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

சசிகலாவை வரவேற்க போலீசார் அனுமதி அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Similar News