தேர்தலுக்கு முன் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிடும்.. அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.!

தேர்தலுக்கு முன் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிடும்.. அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.!

Update: 2021-02-22 20:10 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே திமுக, காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவல்லிக்கேணியில் மினி கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த பேசியதாவது: சென்னையில் இதுவரை 141 அம்மா கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. வருகின்ற 28ம் தேதி முன்னர் அனைத்து வார்டுகளிலும் மினி கிளினிக் திறக்கப்படும். ஜெயலலிதா நினைவிடத்தில் இரண்டாம் கட்டப் பணிகள் தற்போது நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வைக்கு 24ம் தேதி வரை அனுமதி இல்லை.

அரசியலுக்கு சகாயம் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களின் கொள்கைகளை மக்களிடம் எடுத்து சொல்லட்டும். மேலும், திமுக காங்கிரஸ் கூட்டணி நெல்லிக்காய் மூட்டை போல் சிதறுகிறது. திமுக எம்.எல்.ஏ.வே புதுச்சேரியில் ராஜினாமா செய்துள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினரையே காப்பாற்ற முடியவில்லை. எனவே தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே திமுக, காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிட வாய்ப்புள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Similar News