புல்டோசர் முன்பு சைக்கிள் நிற்க முடியாது: பா.ஜ.க. வெற்றி குறித்து ஹேமமாலினி!

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை மீண்டும் பாஜக கைப்பற்றியுள்ளது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்டுள்ளது.

Update: 2022-03-10 09:03 GMT

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை மீண்டும் பாஜக கைப்பற்றியுள்ளது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்டுள்ளது. அங்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த முதலே பாஜக முன்னிலை பெற்று வருகிறது. சுமார் 270க்கும் அதிகமான தொகுதிகளில் தற்போது முன்னிலையில் உள்ளது. அதே போன்று மற்ற 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், பாஜக எம்.பி., ஹேமமாலினி தேர்தல் வெற்றி பற்றி செய்தியாளர்களிடம் கூறியதாவது: உபியில் எங்களின் அரசு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று அனைவருக்கும் தெரியும். மாநில வளர்ச்சியின் அனைத்து விஷயங்களிலும் நாங்கள் பணியாற்றியுள்ளோம். இதனால் பொதுமக்கள் எங்கள் மீது அலவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

எனவே புல்டோசருக்கு முன்னாடி எதுவும் வந்து நிற்க முடியாது. அது சைக்கிளா இருக்கட்டும் அல்லது வேறு எதுவாக இருக்கட்டும். அதனை துவம்சம் செய்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News