நெல்லை: பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேவேந்திரகுல வேளாளர் மக்கள் உற்சாக வரவேற்பு.!

நெல்லை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் தேவேந்திரகுல வேளாளர் பொதுமக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் வாக்கு சேகரிக்க செல்லும் போது உற்சாகமான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Update: 2021-03-24 02:34 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் களம் இறங்கியுள்ளார். இவர் அத்தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். சமீபத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தேவேந்திரகுல வேளாளர் சட்டம் ஒருமனதாக நிறைவேறியது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகள் என்று அந்த மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.




 


இதனிடையே தமிழகத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை தேவேந்திரகுல வேளாளர் பொதுமக்கள் ஆதரித்து வருகின்றனர். அது போன்று நெல்லை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் தேவேந்திரகுல வேளாளர் பொதுமக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் வாக்கு சேகரிக்க செல்லும் போது உற்சாகமான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அது போன்று நெல்லை டவுண் பகுதியான ஜெபஸ்தியார் கோவில் தெரு, நதிப்புரம், ரெங்கநாதபுரம் பாறையடி, கோட்டையடி, இலந்த குளம், கண்டியப்பேரி ஆகிய பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றார். அவருக்கு ஆரத்தி எடுத்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அவருக்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது என்று அந்த மக்கள் பேசி வருகின்றனர்.

Similar News