நீலகிரி: கீழ்குந்தா பேரூராட்சி 6வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி!

நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சியில் 6வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் லக்ஷனா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

Update: 2022-02-22 04:50 GMT

நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சியில் 6வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் லக்ஷனா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். சில இடங்களில் திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்து வருவதையும் காண முடிகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சியில் 6வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட லக்ஷனா என்பர் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இதனால் நீலகிரி மாவட்டத்தில் முதன் முறையாக தாமரை மலர்ந்துள்ளது. இதே போன்ற வெற்றி தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் எதிரொலிக்கும் என பாஜக தொண்டர்கள் பேசி வருகின்றனர்.

Tags:    

Similar News