கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன்.. பா.ஜ.க. தலைமை அறிவிப்பு.!

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-03-06 06:37 GMT

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தொகுதி காலியாகவே இருந்தது. இதனையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலுடன் அத்தொகுதிக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


 



இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை நியனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மீண்டும் வெற்றி பெறுவார் என்று பாஜக தலைமை உறுதியுடன் நம்புகிறது. அது மட்டுமின்றி கன்னியாகுமரியில் பாஜக வலுவாக உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள ஒட்டு மொத்த ஓட்டுகளும் பாஜகவுக்கு விழும் என்று கூறப்படுகிறது.

Similar News