துணை ஆணையர் பணி விடுவிப்பு.. தி.மு.க. ஆட்சியின் ஒருதலைப்பட்சமான செயல்.. பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை.!
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் திரு.மோகன் பாகவத் மதுரை வருகை அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு கண்டனம்.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் திரு.மோகன் பாகவத் மதுரை வருகை அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு கண்டனம்.
ராஷ்டிரிய சுயம்சேவக் அமைப்பின் அகில இந்திய தலைவர் திரு.மோகன் பாகவத் அவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பின் நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்திப்பது வழக்கமான ஒன்று, ஆங்காங்கே ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்பார். இவருக்கு உயர்மட்ட பாதுகாப்பான இசட்பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
உலகின் பெரிய சேவை அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் முதன்மையாக திகழ்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கும், இந்திய மக்களின் உயர்வுக்கும் சேவை ஆற்றுகிற அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். விளங்குகிறது.
திரு. மோகன் பாகவத் அவர்கள் மதுரை கன்னியாகுமரி பகுதிகளில் 22 முதல் 26வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவர் மதுரை வருகைக்கான ஏற்பாடுகளை அங்கு உள்ள அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். நாட்டின் அதி உயர் பாதுகாப்பு'' கொண்ட தலைவர் வருகையின் போது வழக்கமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை பின்பற்றி மதுரை மாநகராட்சி நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர்.
இதற்கென மதுரை துணை ஆணையர் சண்முகம் அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பராமரிப்பு பணிகள் குறித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக தமிழக அரசு அவரை பணி விடுவிப்பு செய்துள்ளது மிகவும் வருந்ததக்கது, கண்டிக்கத்தக்கது.
யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல் வைத்திருக்கிறதா? பாதுகாப்பு பட்டியலில் இருக்கும் தலைவர்கள் வரும் போது அவர்களுக்கு உரிய வசதி செய்து கொடுப்பது சட்ட விரோதமா?