சேலத்தில் பா.ஜ.க. மாநில இளைஞர் அணி மாநாடு.. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு.!

சேலத்தில் பா.ஜ.க. மாநில இளைஞர் அணி மாநாடு.. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு.!

Update: 2021-02-21 09:56 GMT

சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெறுகின்ற பாஜக மாநில இளைஞர் அணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுகிறது. இதனால் அதிமுக கூட்டணியை ஆதரித்து மத்திய பாஜக தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பல்வேறு துறை அமைச்சர்கள் தமிழகத்தில் பல்வேறு வகையான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில், சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக மாநில இளைஞர் அணி மாநாட்டில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சேலத்திற்கு வருகின்றார். அவரது வருகையை முன்னிட்டு சேலத்தில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசியலில் எந்த மாதிரியான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்பன பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 

Similar News