தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை: தி.முக. அரசு மீது புகார் அளிக்கப்படுமா ?

சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-10-12 06:40 GMT

சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் திமுக அரசு செய்யும் அராஜகம் பற்றி எடுத்துரைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். சமீப காலமாக திமுக, பாஜக பிரமுகர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களே நேரடியாக தலையிடுவது பொதுமக்களுக்கு மட்டுமின்றி பாஜக தலைவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இது பற்றிய புகாரை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெறுகிறது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Bjp Twiter


Tags:    

Similar News