உலகப்புகழ் பெற்ற நம் தமிழக காவல் துறையை அவர்கள் வேலையை செய்ய விடுங்கள் - முதல்வருக்கு ஆலோசனை வழங்கிய அண்ணாமலை!

கோவை தற்கொலை படை தாக்குதல் விசாரணையை தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு துறைக்கு மாற்றியமைத்து பரிந்துரைத்தது BJP சார்பில் வரவேற்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-27 02:28 GMT

தமிழக பா.ஜ.க தலைவர் ட்விட்டர் பதிவு:

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் குறித்து ட்விட்டர் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். மேலும் அந்த ட்விட்டர் பதிவில் இது பற்றி கூறுகையில், "கோவை தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை தமிழக பா.ஜ.க வரவேற்கிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.


 முதல்வருக்கு வழங்கிய ஆலோசனைகள்: 

1) தேச விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குங்கள்.

2) தமிழக காவல்துறையின் உளவுத்துறை உலக புகழ் பெற்றது. சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் தொடர் தோல்விகளுக்குப் பின்பு உளவுத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக முன்னெடுங்கள்.

3) தி.மு.கவினர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு காவல்துறையினரை பயன்படுத்தாமல், தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.



4) நீங்கள் பதவி ஏற்கும் போது அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று அரசை நடத்துவீர்கள் என்ற உறுதிமொழியை அளித்தீர்கள். மேல் குறிப்பிட்ட ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்" என்று கூறி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு நீங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தமிழக பா.ஜ.க உறுதுணையாக இருக்கும் என்று வாக்குறுதியும் அளித்துள்ளார்.

Input &Image courtesy: News

Tags:    

Similar News