டெல்லியில் பா.ஜ.க. பிரமுகரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் - போலீஸ் விசாரணை!

Update: 2022-04-21 13:57 GMT

கிழக்கு டெல்லியில் பா.ஜ.க., பிரமுகர் ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஜித்து சௌத்ரி 42, இவர் பா.ஜ.க. நிர்வாகியாக உள்ளார். இதற்கிடையில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரண்டு தரப்புக்கு இடையில் மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. இந்த சம்பவம் டெல்லி முழுவதும் பதற்றமான சூழலே உருவாக்கியது.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 20) இரவு 8 மணியளவில் ஜித்து சௌத்ரி தன்னுடைய வீட்டுக்கு வெளியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் கொலை நடந்த இடத்தில் போலீசார் தடயங்களை சேகரித்தனர். அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News