கனமழை எதிரொலி: 18 வயது இளைஞரை போன்று ஓடி, ஓடி மக்கள் பணி செய்யும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் பல்வேறு அணைகள், ஏரிகள் நிரம்பி வருகிறது. மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இது போன்ற சமயங்களில் நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி துரிதமாக செயல்பட்டு வருகிறார்.

Update: 2021-11-13 06:00 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் பல்வேறு அணைகள், ஏரிகள் நிரம்பி வருகிறது. மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இது போன்ற சமயங்களில் நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி துரிதமாக செயல்பட்டு வருகிறார்.


பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக இரவு, பகல் என்று தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அணையை பார்வையிடுவது மற்றும் ஏரி மதகுகளில் வெளியாகும் மழைநீரை முறையாக செல்கின்றதா என்ற பல்வேறு ஆய்வுகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.


மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளில் படகு மூலம் சென்று மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. சென்னையில் 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் வெளியில் வந்து பொதுமக்களை சந்திப்பது இல்லை எனற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. 


ஆனால் தனது வயதையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையிலும் இளைஞரை போன்று ஓடி, ஓடி பொதுமக்களின் துயரங்களை துடைத்து வரும் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தியை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter:





Tags:    

Similar News