4 நாட்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார் பா.ஜ.க. எம்.பி., ஹேமமாலினி.!

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு திரை நட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்வதற்கு பாஜக மேலிடம் திட்டம் வகுத்துள்ளது.

Update: 2021-03-02 10:01 GMT

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு திரை நட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்வதற்கு பாஜக மேலிடம் திட்டம் வகுத்துள்ளது.

அதன்படி நடிகர் சோனு சூட், மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்கிறார். அதே போன்ற நடிகர்கள் அனில் கபூர், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கின்றனர்.


 



இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு வடமாநில மக்கள் உள்ளனர். அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக பாஜக பிரபலமான ஹேமமாலினி எம்.பி., இந்தி மற்றும் தமிழில் பிரச்சாரம் செய்ய உளளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 4 நாட்கள் தங்கி, பல்வேறு மாவட்டங்களில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாஜகவுக்காக வாக்கு சேகரிக்க உள்ளார். இவரது பேச்சு வடமாநில மக்களிடம் விரைவாக சென்று சேரும் வகையில் பேச்சு அமையும் என பாஜக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

Similar News