பா.ஜ.க. தேசிய செயற்கு கூட்டம் ஐதராபாத்தில் தொடங்கியது!

Update: 2022-07-02 11:35 GMT

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இக்கூட்டத்தை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார்.

ஐதராபாத் நகரில் உள்ள பன்னாட்டுக் கூட்ட அரங்கத்தில் பா.ஜ.க.வின் தேசியக் செயற்குழுக் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதனால் ஐதராபாத்தின் முக்கிய சாலைகள் மற்றும் இடங்களில் பா.ஜ.க. கொடிகள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News