முதலமைச்சர் பற்றி விமர்சனம்: பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்த தி.மு.க. அரசு!

Update: 2022-04-08 09:40 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து கருத்து வெளியிட்டதால் கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட பிரசார அணி தலைவராக இருப்பவர் ஜெய்பிரகாஷ். இவர் பாஜக நிறுவன நாள் நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனை தாங்கிக்கொள்ள முடியாத திமுகவினர் போலீசார் வைத்து வழக்குப்பதிவு செய்து, நள்ளிரவு நேரத்தில் ஜெய்பிரகாஷை கைது செய்வதற்கு சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள், போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 4 மணி நேர பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜெயபிரகாஷை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். திமுக அரசு அமைந்த பின்னர் யாராவது விமர்சனம் செய்தால் அவர்களை கைது செய்து அடக்கிவிடலாம் என்று எண்ணுகிறது. இது போன்ற சம்பவத்தால் எதிர்க்கட்சியினர் கொந்தளிப்பில் உள்ளனர்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News