உள்ளாட்சி தேர்தல்: பாளையங்கோட்டையில் பிரச்சாரத்தை தொடங்கிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை !

தமிழகத்தில் விடுப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

Update: 2021-09-29 06:02 GMT

தமிழகத்தில் விடுப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் பாஜக தலைவர் கே.அண்ணாமலை திருநெல்வேலி மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதன்படி இன்று பாளையங்கோட்டை ஒன்றியத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். 


அப்போது பாஜக எம்.எல்.ஏ., காந்தி, மாவட்ட தலைவர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இது பற்றி அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஒன்றியத்தில் போட்டியிடும் பூபதி ராஜா அவர்களை ஆதரித்து திரு காந்தி எம்.எல்ஏ., மாவட்டத் தலைவர் மகாராஜாவுடன் மக்கள் எழுச்சியுடன் தாமரை மலர தேர்தல் பிரச்சாரம் தொடங்கினோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Bjp President Annamalai

Tags:    

Similar News