பா.ஜ.க சித்தாந்தத்தை நம்பி யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் ! - ராஜேந்திர பாலாஜி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில் !

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பா.ஜ.க'வில் இணையவுள்ளாதாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் இது குறித்து கேட்கப்பட்டது

Update: 2021-08-08 16:15 GMT

"பா.ஜ.க சித்தாந்தத்தை நம்பி யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்" என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பா.ஜ.க'வில் இணையவுள்ளாதாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் இது குறித்து கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அவர், "பா.ஜ.க சித்தாந்தத்தை நம்பி யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அரசியலில் எந்த கட்சியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது. சுதந்திரமாக செயல்பட முடியாததால், உரிய மரியாதை கிடைக்காததால் பா.ஜ.க'வை தேடி வருகின்றனர்" என அண்ணாமலை கூறியுள்ளார்.

தற்பொழுது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டில்லியில் முகாமிட்டிருப்பது குறிப்பிடதக்கது.

https://twitter.com/PTTVOnlineNews/status/1424452854379532289?s=08

Tags:    

Similar News