தே.மு.தி.க. முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.. வானதி சீனிவாசன்.!

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Update: 2021-03-09 12:07 GMT

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. அதற்கு மாற்றாக எந்த கட்சிகளை சேர்ப்பது மற்றும் எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது உள்ளிட்டவை இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில் தெரியவரும்.


 



இந்நிலையில், தேமுதிக கூட்டணியை விட்டு விலகியது வருத்தம் அளிக்கிறது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக, -பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை தேமுதிக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.




 


ஏதாவது ஒரு வகையில் மீண்டும் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க வேண்டும். தேமுதிக, தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகியது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News