அப்போலோ'வில் கவுதமசிகாமணி - அடைக்கப்பட்ட கடைகள் !

விழுப்புரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டு கடைகள் அடைக்கப்பட்டது.

Update: 2021-08-19 11:15 GMT

அப்பலோ மருத்துவமனையில் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி மோசமான உடல்நிலையால் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து விழுப்புரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டு கடைகள் அடைக்கப்பட்டது.

சென்னை கோட்டையில் இருந்த பொன்முடிக்கு திடீரென அவரது மகன் கவுதமசிகாமணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பதறி அடித்துக் கொண்டு பொன்முடி புறப்பட்டுள்ளார். அவரிடம் சென்னை கிரீம்ஸ் சாலை அப்பலோவிற்கு கவுதமசிகாமணி அழைத்துச் செல்வதாக வீட்டில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். இந்த விஷயம் முதல்வர் ஸ்டாலின் காதுக்கு போகவே அவரும் அப்போலோ விரைந்துள்ளார். அங்கு அமைச்சர் பொன்முடியை அழைத்து பதற வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்துவிட்டு ஸ்டாலின் புறப்பட்டுள்ளார்.

இந்த தகவல் விழுப்புரத்தில் காட்டுத் தீ போல பரவியுள்ளது, தி.மு.க'வினர் சிலர் விழுப்புரத்தில் உள்ள பொன்முடி வீட்டிற்கு முன் திரண்டுள்ளனர். இதனால் கவுதமசிகாமணி உடலுக்கு ஏதோ தீவிர பிரச்சனை என விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் வதந்தி பரவ ஆரம்பித்தது. ஒரு சிலர் கடைகளை அடைக்க ஆரம்பித்துள்ளனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து தீவிரசிகிச்சை அளித்த பின் அபாய கட்டத்தை தாண்டிய பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் கவுதமசிகாமணி. பின்னரே பதற்றம் தணிந்தது கடைக்காரர்களுக்கு.


Source - Asianet NEWS

Tags:    

Similar News