கொரோனா நேரத்தில் போடப்பட்ட வழக்குகள்.. சி.ஏ.ஏ. போராட்ட வழக்குகள் ரத்து.. தென்காசி பரப்புரையில் முதலமைச்சர் தகவல்.!

கொரோனா நேரத்தில் போடப்பட்ட வழக்குகள்.. சி.ஏ.ஏ. போராட்ட வழக்குகள் ரத்து.. தென்காசி பரப்புரையில் முதலமைச்சர் தகவல்.!

Update: 2021-02-19 11:58 GMT

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தபோது மிகவும் நெருக்கடியான காலகட்டத்திலும் அதிமுக அரசு பொங்கல் விழாவை ஏழை, எளிய மக்கள் கொண்டாடுவதற்காக ரூ.2,500 வழங்கப்பட்டது.

அதோடு 5 மாதங்கள் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு கொடுக்கப்பட்டது. எந்த மாநிலங்களிலும் இது போன்று வழங்கவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் இது போன்று வழங்கப்பட்டது. நெருக்கடியான நேரம் என்று பாராமல் மக்களின் நலனை மட்டும் அதிமுக அரசு பார்த்து வருகிறது. மேலும், மருத்துவக் காப்பீடு திட்டத்தின் தொகையை 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2000 அம்மா மினி கிளினிக் கொண்டு வந்து சாதனை படைத்தது தமிழக அரசு. 

அதே போன்று கொரோனா ஊரடங்கை மீறியவர்கள், தேவையின்றி வதந்தி பரப்பியவர்கள் மீது 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் சில வழக்குகளை தவிர்த்து மற்ற அனைத்தும் ரத்து செய்யப்படும். அதே போன்று சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் மீது 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் சிலவற்றை தவிர பிற வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் கூறினார்.

Similar News