ஏழைக் குடும்பத்தை சேர்ந்த தன்னையும் அமைச்சராக்கியவர் பிரதமர் மோடி ! - மத்திய அமைச்சர் முருகன் உருக்கம் !

மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கத்தில் 'மக்கள் ஆசி யாத்திரை' எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை மாவட்டத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

Update: 2021-08-16 11:18 GMT

மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கத்தில் 'மக்கள் ஆசி யாத்திரை' எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை மாவட்டத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி அவரது படத்திற்கு எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தன்னை மத்திய இணை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பிரதமர் மோடி. செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த தன்னையும் மாநில தலைவராக்கியது பாஜக.

தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் இப்படி செய்வதற்கு முன்வராது. சமூகநீதியை முன்னிறுத்த வேண்டிய எதிர்க்கட்சியினர் சிலர் என்னை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துவைக்க கூடாது எனவும் தடுத்தனர்.

இதனால் பிரதமர் மோடியால் அமைச்சராக அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பினை இழந்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source: TOP NEWS

Image Courtsy: Topnewstamil

https://www.toptamilnews.com/union-minister-l-murugan-slams-opposition-leaders-over-parliament-row/

Tags:    

Similar News