தேர்தல் எதிரொலி.. பெரியகுளம் பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு.!

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

Update: 2021-03-12 06:15 GMT

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல் 6ம் தேதி) நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பிரிப்பது என்று பிஸியாக உள்ளனர்.


 



முதலாவதாக அதிமுக கூட்டணியில் பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் பெரியகுளம் உட்கோட்ட காவல் துறையினர் இணைந்து பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான, லட்சுமிபுரம் உட்பட இடங்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

Similar News